நீ நிலவாக மாறி போனால் ...
எவ்வளவு சுகமாய் இருக்கும் ...
மாலை நேர தனிமை பயணங்களில்
என்னோடே ஜன்னல் வழியாக ...
வருவாய் ...!!!
மொட்டை மாடியில் நான் மட்டும்
தனியாய் அழாமல் ...
உன்னிடம் சொல்லி ஆறுதல்
பெற்றிருப்பேன் ...
ஆனால்..
இப்பொழுது எப்படி வேண்டி
கொண்டிருகிறேனோ
அப்பொழுதும் அப்படியே வேண்டி
கொண்டிருப்பேன் ...
விடியாமல் ...
இரவுகள் மீளா துயிலில்
ஆழ்ந்து விட வேண்டும் என்று ..!!!